ஒருகோடி ஏ.பி.வி.பி உறுப்பினர்கள்

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பின் தேசியசெயலர் எல்.முத்துராமலிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஏ.பி.வி.பி அமைப்பில் 32 லட்சம் மாணவர்கள் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். ஏ.பி.வி.பியின் 67வது தேசிய மாநாடு, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பது, பாராத பாரம்பரியக் கல்வி முறையில் உள்ள யோகா, பகவத்கீதையை பாடத் திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முனைவர் பட்ட ஆய்வு மாணவிகளுக்கு 8 மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பதற்கும், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் முடிவுக்கும், சிலம்பத்தை தேசிய விளையாட்டாக அறிவித்தமைக்கும் மாநாட்டில் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டது. ஏ.பி.வி.பி தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு 75 ஆண்டுகளாகிறது. இதனையொட்டி, உறுப்பினர் சேர்க்கையை 1 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். வரும் ஜனவரி 26ம்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, ஏ.பி.வி.பி’யின் அனைத்து கிளைகளிலும் `திரிரங்கா’ எனப்படும் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்தப்படும். சுதந்திரப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட வீரர்கள் குறித்த புத்தகங்களை வெளியிடவும் தீர்மானித்துள்ளோம்’ என்று கூறினார்.