ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு எதிர்ப்பு

பாரதம் முழுவதும் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் அவர்களின் அனுமதியோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ‘ஷாகா’ எனப்படும் தினசரி ஒருமணி நேர பயிற்சி செய்கின்றனர். இதில் பண்புப் பயிற்சி, விளையாட்டு, உடற்பயிற்சி, தேசப்பற்று போன்ற விஷயங்கள் இடம்பெறும். அவ்வகையில், கோவையில் உள்ள சில கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ‘ஷாகா’ பயிற்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரியார் திராவிட அமைப்பினர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். நேற்று காலையில் விளாங்குறிச்சி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் ஷாகா பயிற்சி நடைபெற்றது. அதற்கு பெரியார் திராவிட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் அந்த அமைப்பை சேர்ந்த 30 பேரை கைது செய்தனர்.