தாய்மதம் திரும்பிய நல் உள்ளங்கள்

ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள கில்கிலா ஷிவ் மந்திரில் விஸ்வ கல்யாண் மகாயக்ஞத்தின் நிறைவு விழாவில் சனிக்கிழமை தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபால் பிரதாப் சிங் கடந்த காலத்தில் தங்கள் மதத்தை விட்டு வெளியேறிய மக்களின் கால்களைக் கழுவி அவர்களை சனாதன தர்மத்திற்குத் திரும்பச் செய்தார். இந்நிகழ்ச்சியில், கோமதி சாய், அரச குடும்பத்தைச் சேர்ந்த விஜய் ஆதித்யா சிங்தேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 250 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் தாங்கள் சார்ந்திருந்த மதத்தை உதறி, தாய்மதமான சனாதன தர்மத்திற்கு திரும்பினர்.