எஸ்.டி.பி.ஐ பயங்கரவாதி கைது

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சஞ்சித்தை, எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எப்.ஐ பயங்கரவாதிகள் அவர் மனைவியின் கண் எதிரில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். இவ்வழக்கில், இதுவரை காவல்துறை 5 பேரை கைது செய்துள்ளது. இதில் மூவர் பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள். 4 பேரை காவல்துறை தேடி வருகிறது. இந்நிலையில், செர்புளச்சேரியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கொலையாளிகள் அடையாள அணிவகுப்புக்காகவே அவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை என காவல்துறை தெரிவிக்கிறது. ஆனால், காவல்துறை விசாரணையில் திருப்தி இல்லாததால், சஞ்சித்தின் மனைவியும், பா.ஜ.கவும் ஹிந்து அமைப்புகளும் சி.பி.ஐ விசாரணை கோரி வருகின்றனர்.