அடிக்கல் நாட்டிய மோடி

ஹிமாச்சல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் ரூ. 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள நீர்மின் திட்டம், 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த 7 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான ரேணுகாஜி அணை திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து பேசிய மோடி, சுற்றுச்சூழலை காப்பாற்றும் அதேவேளையில் நமது தேசம் வளர்ச்சியை எவ்வாறு துரிதப்படுத்துகிறது என்று பார்த்து உலகமே நம்மை பாராட்டுகிறது. சூரிய சக்தி, நீர்மின் திட்டம், காற்றாலை, பசுமை ஹைட்ரஜன் என நமது தேசம் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.