தேசியவாதிகளுக்கான மதிப்பு

அரசியல் கருத்துக்களையும், விமர்சனங்களையும் வெளிப்படையாக தெரிவிக்கும் திரைப்பிரபலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசின் நடவடிக்கைகள், தேசிய அளவிலான அரசியல் நிகழ்வுகள் பற்றி வெளிப்படையாகச் சொல்லி பெரும் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் சீக்கியர்களை இழிவுபடுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டதாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேற்று காவல்நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேசியவாதிகளை மதிப்புக் குறைவாகவும், மோசமாகவும் தொடர்ந்து நடத்துகின்றனர். நாட்டை நேசிக்க வேண்டுமெனில், மிகப்பெரிய பலம் வாய்ந்த எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று தெரிவித்தார்.