அகத்தியர் சிலை பெயர்ப்பு

அம்பாசமுத்திரத்தில் திருமூலநாதசுவாமி கோயில் உள்ளது. இது ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சித்தர் பீடத்தில் இருக்கும் அகத்தியர் சிலையை சில மர்ம நபர்கள் பெயர்த்து சாக்கு மூட்டையில் வைத்துக்கட்டி பிரகாரத்தில் வைத்திருந்தனர். இந்த விஷயம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கோயில் நிர்வாகம் அகத்தியர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி சித்தர் பீடத்திற்கு இரும்பு கேட் போடும் பணியைத் துவக்கியுள்ளது.