தம்பிகளை தாக்கிய உடன் பிறப்புகள்

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும், 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள சிறுபான்மையினரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசுகையில், முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியுள்ளார். இதனால் அங்கிருந்த தி.மு.வினர் மேடையில் ஏறி மைக்கை தள்ளிவிட்டும், நாற்காலியை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ஆர்ப்பாட்டம் பாதியில் நின்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.கவினர் தாக்கிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கதில் இணைத்து, ‘அதிகாரத் திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.