டாஸ்மாக்கில் இல்லம் தேடி கல்விக்குழு

திருச்சி மாவட்டத்தில், தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டு வருகிறது. இங்கு சர்மிளா சங்கர் என்பவரது தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி குழு டி சர்ட் உடன் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிகொண்டு, இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து ,கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால் இல்லம் தேடி கல்வி பிரச்சார குழுவிலிருந்து சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பணிக் குழுவை நீக்கம் செய்து திருச்சி ஒருங்கிணைந்த பள்ளி முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.