ஆர்.எஸ்.எஸ் மத்திய அரசை இயக்கவில்லை

ஹிமாச்சால பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், ‘உலக அளவில் பாரதம் வல்லரசாக இல்லாவிட்டாலும் கொரோனா தொற்றுக்கு பின், உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகின் பல நாடுகள் பின்பற்றத் துவங்கியுள்ளன. அந்த நாடுகள் பாரதத்தை குரு ஸ்தானத்தில் வைத்து பார்க்கின்றன. மத்திய அரசை, ஆர்.எஸ்.எஸ் தான் ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல இயக்குகிறது என சில ஊடகங்கள் சித்தரிப்பது உண்மையல்ல’ என பேசினார்.