துரைமுருகனுக்கு கோரிக்கை

‘அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு வழங்க யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை சிறையில் தள்ளவும் தயங்க மாட்டேன்’ என  தமிழக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறியிருக்கிறார். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதிகாரிகளும் இடைத்தரகர்களும் லஞ்சம் பெறுகின்றனர், வீடு கட்டமாலேயே கட்டியதாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் பெறப்படுகிறது, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளை காட்டி பணம் செலுத்தப்படுகிறது என்று கடந்த செப்டம்பர் மாதம் பா.ஜ.க, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது. இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் இந்நிலை உள்ளது. எனவே துரைமுருகன் உடனடியாக தான் உறுதியளித்தபடி, நடவடிக்கை எடுக்க வேண்டும், என பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.