மணிமகுடத்தில் மற்றொரு வைரம்

உலக புகழ்பெற்ற பிரான்சின் பேஷன் ஆடை விற்பனை நிறுவனமான ஷனெல் நிறுவனத்தின் உலகலாவிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) பாரதத்தை சேர்ந்த பெண்ணான லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் கோலாபூரில் பிறந்த இவர் புகழ்பெற்ற யுனிலீவர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைமை மனிதவள அதிகாரியாக பொறுப்பேற்றார். கடந்த 30 ஆண்டுகளாக அங்கு பணியாற்றிய லீலா நாயர், வரும் ஜனவரியில் அந்த பதவியில் இருந்து விலகி ஷனெல் நிறுவனத்தில் இணைகிறார்.