மறைந்துவிட்டார் ஆனால் மறக்கப்படவில்லை

புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து வீரத்துடன் பதிலடி கொடுத்த ​​சி.ஆர்.பி.எப் 110வது பட்டாலியனை சேர்ந்த கான்ஸ்டபிள் சைலேந்திர பிரதாப் சிங், அத்தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். கொல்லப்பட்ட கான்ஸ்டபிள் சைலேந்திர பிரதாப் சிங்கின் சகோதரியின் திருமணம் டிசம்பர் 13 அன்று நடைபெறுவதை ஒருவர் மூலமாக அறிந்த சக வீரர்கள், அந்த திருமணத்தை தவறவிடக்கூடாது, அவரின் சகோதரரின் ஸ்தானத்தில் இருந்து அந்த திருமணத்தை நடத்தித்தர வேண்டும் என முடிவு செய்து கிளம்பி திருமணத்திற்கு வந்தனர். இதனை திருமண வீட்டார்கூட எதிர்பார்க்கவில்லை. அந்த சி.ஆர்.பி.எப் சகோதரர்கள் அந்த பெண் வீட்டாரின் சடங்குப்படி மணமகளுக்கு மேலே மலர் முக்காடு ஏந்தி மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரையும் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியது.