பாரதியர்கள் பாரதம் வருகை

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் ஹிந்துக்கள் சீக்கியர்கள், ஹிந்து சமூகங்களைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் குடிமக்களை மீட்டழைத்து வரும் அரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு. அவ்வகையில், தற்போது காபூலில் இருந்து 110 பேரை விமானம் மூலம் அழைத்து வந்துள்ளது. அவர்களுடன் சீக்கிய குருத்வாராக்களில் இருந்து மூன்று புனித குரு கிரந்த் சாஹிப், 5ம் நூற்றாண்டு அசாமி மந்திரில் இருந்து ராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட ஹிந்து மத புனித நூல்களும் விமானத்தில் கொண்டு வரப்பட்டன.