பாகிஸ்தான் வங்கதேசம் இணைய வேண்டும்

முஸ்லிம்களின் பரேல்வி என்ற பிரிவின் முக்கிய அமைப்பு என்று கூறப்படும் அகில இந்திய தன்சீம் உலமா இ இஸ்லாம் என்ற முஸ்லிம் அமைப்பு, முன்பிருந்த அகண்ட பாரதத்திற்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் இந்தோ ஏஷியா நியூஸ் சர்வீஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அதன் பொதுச் செயலாளர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி, ‘பாரதப் பிரிவினைக்கு முன்பு இருந்ததைப் போலவே பாகிஸ்தான், வங்கதேசத்தை இணைப்பதன் மூலம் பாரதம் அகண்ட பாரத அந்தஸ்தைப் பெற வேண்டும். ஜெர்மனியால் ஒன்றுபட முடியும்போது, ​​பாகிஸ்தான், வங்கதேசம் போன்றவற்றை ஏன் பாரதத்துடன் இணைக்க முடியாது? நாம் முன்னேற வேண்டும், இந்த இணைப்பு பாரதத்தை வலிமையான நாடாக மாற்றும்’ என்றார்.