தேசிய கீதத்தை அவமதித்த மமதா

மஹாராஷ்டிராவின் மும்பைக்கு சென்ற மேற்குவங்க முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நிகழ்ச்சியின் முடிவில் தானே தேசிய கீதத்தை பாடினார். முதலில் அமர்ந்து தேசிய கீதம் பாடினார். பிறகு எழுந்து நின்று மீதியை தொடர்ந்தார். அதையும் முழுதாக முடிக்காமல் அவசரமாக முடித்துக்கொண்டார். இப்படி, தாய்நாட்டின் தேசிய கீதத்தையே அவமதித்த மமதாவை பா.ஜ.கவினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.