திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தன் காலில் தண்ணீர்படாமல் இருக்க தொண்டர்களை பயன்படுத்தி தொகுப்பு நாற்காலியில் பயணித்த விவகாரம் பெரிதானது. இதனையடுத்து, ‘என் மீதும், என் இயக்கம் மீதும் களங்கம் ஏற்படுத்தவே வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. நான் தங்கி இருப்பது அறக்கட்டளை, வீடு அல்ல. மழை நேரங்களில் அந்த இடத்தில் சாக்கடை சூழ்ந்து கொள்ளும்’ என தெரிவித்துள்ளார். அப்படியெனில், தான் சாக்கடையில் நடக்கக்கூடாது, தொண்டர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை என நினைத்து அவர்கலை சாக்கடையில் நடக்கவைக்கும் தலைவரா அவர்? தி.மு.கவின் கூட்டணியில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கியுள்ள அறக்கட்டளை கட்டடத்தில் உள்ள சாக்கடை நீரைகூட வெளியேற்ற முடியாத நிலையில்தான் தி.மு.கவின் ஆட்சி உள்ளது என கட்டியம் கூறுகிறாரா? என்ற சந்தேகத்தை தந்துள்ளது திருமாவளவனின் விளக்கம்.