சேவையே வேள்வி

  1. ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் சேவா இண்டர்நேஷனல் அமைப்புகள் இணைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேலூர், குடியாத்தம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தார்பாய், பாய், சேற்றுப்புண் மருந்து போன்ற நிவாரண பொருட்களை வழங்கின.
  2. ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக சென்னை மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருங்குளத்தூர், பம்மல் பகுதி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
  3. சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் சேவா இண்டர்நேஷனல் இணைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு தார்பாய், உணவு, பாய் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கியது.
  4. சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் சேவா இண்டர்நேஷனல் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், தேனம்பாக்கம், இருளர் மக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது.
  5. சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், வந்தவாசி மற்றும் வாணியம்பாடி பகுதி மக்களுக்கு பாய், கொசு வலை, போர்வைகள் மற்றும் சேற்று புண் மருந்துகள் வழங்கப்பட்டன.
  6. சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படூர் கிராம மக்களுக்கு உணவு செய்ய தேவையான மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.
  7. தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் உணவு, பிஸ்கட், தண்ணீர் பாட்டில், கொசுவர்த்திச் சுருள், குழந்தைகளுக்கு பால் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது.