தொடரும் தி.மு.க அடாவடி

திருச்சி மாவட்டம் செங்கதிர் சோலையை சேர்ந்த சிவக்குமார் என்ற சோலை சிவா ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இரு தினங்களுக்கும் முன் சிவக்குமார் வீட்டில் இரண்டு பேர் திடீரென நுழைந்து அவரை சவுக்கு கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்து சிவகுமார் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இந்த சம்பவத்தையடுத்து சிவக்குமார் மனைவி சத்தம்போடவே, அக்கம்பக்கத்தினர் வருவதற்கு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். முன்விரோதம் காரனமாக சிவக்குமாரை தி.மு.க ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உட்பட 4 பேர்தான் கொலை செய்தனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவக்குமார் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தலைமறைவான இவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.