தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை உண்டா?

தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை நகரம் நரகமாகிவிட்டது. தெருக்களில் நீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு மழைநீர் வடிகால்வாய், கழிவு நீர் கால்வாய்கள் சரியாக அமைக்காததும் பராமரிக்காததுமே இதற்கு காரணம். ஆனால், அமைத்ததாக, பராமரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக சொல்கின்றனர். தி.மு.க அரசு கடந்த அரசை இதற்கு குறை சொல்கிறது. அப்போது இருந்த அதே அதிகாரிகள்தானே இப்போதும் உள்ளனர்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசு ஏன் தயங்க வேண்டும்? ஊழல் நடத்திருந்தால், அதை வெளிக்கொண்டு வர வேண்டும். ஆனால், சீர்கேட்டிற்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு, தி.மு.க அரசு செயலிழந்து உள்ளது’ என கூறியுள்ளார்.