உளவுத்துறை எச்சரிக்கை

பஞ்சாப்பில் பா.ஜ.க கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சில முக்கிய மாநிலத் தலைவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடிய பல தலைவர்களுக்கு ஏற்கனவே மாநிலத்தில் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுள்ள பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில ஹிந்துத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.