தி.மு.க ஊராட்சி அடாவடி

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரரை அடுத்த வெண்டைன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி,மு,கவை சேர்ந்த கனிமொழி. அவரது வயலில் வேறொருவரின் மாடுகள் மேய்ந்ததுள்ளன. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழியின் கணவரும் 20க்கும் மேற்பட்ட அடியாட்களும் பயங்கர ஆயுதங்களுடன் மாட்டின் உரிமையாளர் வீட்டில் புகுந்து தாக்கினர். இதில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கபட்டவர்கள் இது குறித்து காவல்துறையிடம் கூறியபோது, அவர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் என்பதால் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதால் வேறு வழியின்றி காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.