இதுதானா இவர்களின் மதசார்பின்மை?

நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோயில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மத நல்லிணக்க விழா நடத்தப்பட்டது. இதில் ஹிந்து, கிறிஸ்தவ முஸ்லிம் மதத் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் முஸ்லிம்கள் தரப்பில் கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய அறக்கட்டளை ஜமாத்தின் தலைவர் பாவலர் சித்திக் கலந்துகொண்டார். இவர் புகழ்பெற்ற சதாவதானி செய்கு தம்பி பாவலரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதை அறிந்த முஸ்லிம்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து ‘ஜாமியத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்’ என்ற ஜாக் அமைப்பின் தலைவர் கமால்தீன் ‘பாவலர் சித்திக் ஒரு ஜமாத்தின் தலைவராக இருக்க தகுதியற்றவர் ஆகிவிட்டார். எனவே அவர் தாமாகவே முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியேறிவிட்டார்’ என அறிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.