முஸ்லிம் இளைஞர்கள் அராஜகம்

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் அருள்மிகு மத்தால கொம்பு விநாயகர் ஆலயத்தின் புனித தெப்பக்குளத்தில் இரண்டு நாட்களுக்கு முன் கோபிசெட்டிபாளையத்த சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மாலை 4 மணி அளவில் மாட்டுக்கறி பிரியாணி சமைத்து சாராயம் அருந்தினர். மேலும் ஹிந்துக்கள் புனித தீர்த்தம் எடுக்கும் அந்த தெப்பக்குளத்தில் இறங்கி அட்டகாசம் செய்தனர்.  அவர்கள் இப்படி செய்வது தவறு என கண்டித்த உள்ளூர் ஹிந்து இளைஞர்களிடம், ‘எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளது நான் எதற்கும் பயப்பட மாட்டேன், உன்னால் முடிந்ததை பார்’ என்று கூறியதுடன் குளத்தினை அசுத்தப்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதுபோன்ற செயலை ஹிந்துக்களோ கிறிஸ்தவர்களோ அவர்களின் புனித இடங்களில் செய்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்? தமிழக ஊடகங்கள் என்ன சொல்லி இருக்கும்? தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் எப்படியெல்லாம் பேசி இருக்கும்? என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும், இவர்கள் சார்ந்துள்ள ஜமாத்துகளும் உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதே தற்போதைய கேள்வி.