சேவையே வேள்வி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி அமைப்புகள் இணைந்து சுமார் 1,500 நபர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவு வழங்கின. மேலும், ஆம்பூர் நகர், பெரியாங்குப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மளிகை தோப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்பூர் சௌடேஸ்வரி திருமண மண்டபத்தில் சேவாபாரதி மூலம் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு சேவை செய்யப்பட்டு வருகிறது.