ஹிந்துக்களை அவமதிக்கும் காமெடி நடிகர்

அமெரிக்காவில் உள்ள ஒரு அரங்கில் சமீபத்தில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சர்ச்சைக்குரிய சிரிப்பு பேச்சாளர் வீர் தாஸ், தனது பாரத கலாச்சார எதிர்ப்பை காமெடி என்ற பெயரில் அங்கு பதிவு செய்தார். நான் பகலில் பெண்களை வணங்கும் நாட்டிலிருந்து வருகிறேன் இரவில் அந்த பெண்களை நாங்கள் கூட்டு பலாத்காரம் செய்கிறோம். பாரதம் ஒரு பாம்பு பிடிப்பவர்களின் தேசம், குள்ள நரிகளின் நிலம் என பாரதம் குறித்த பல தவறான பிம்பங்களை முன்வைத்தார். அவர் பாரதப் பிரதமர் மோடியையும் உத்தர பிரதேச முதல்வர் யோகியையும் கிண்டல் செய்வதாகக் காட்டிக்கொண்டு ஹிந்து மதத்தை கிண்டல் செய்துள்ளார். மேலும், லக்கிம்பூர் கலவரம், பி.எம் கேர்ஸ் நிதி என பல விஷயங்களை காமெடி என்ற பேரில் கொச்சைப்படுத்தினார். இதுபோல அவர் செயல்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாக அவர், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி குறித்து அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பெண்களை குறித்து ஆபாசமாக பலமுறை பேசியுள்ளார்.