தலையெடுக்கும் ரௌடி கலாச்சாரம்

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது ரௌடிகளின் கலாச்சாரம் என்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற காஞ்சிபுரம் வன்முறையே சாட்சி. சிறையில் அடைக்கப்பட்ட தினேஷ்அவருடைய ஆதரவாளர் தியாகு ஆகியோர் மறைமுகமாக பல குற்ற சம்பவங்களை தங்கள் ஆதவாளர்கள் மூலம் செய்து வந்த நிலையில் தற்போது தினேஷின் ஆட்கள் ஜெமினி, ஜெகன் உள்ளிட்ட 5 பேர், ஒரே நாளில் நான்கு நபர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். ஒரு சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். இது காஞ்சிபுரம் நகரில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.