சேவாபாரதி பொதுக்குழு

சேவாபாரதி தென்தமிழ்நாட்டின் மாநில பொதுக்குழு, திருநெல்வேலி பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் நவம்பர் 13, 14 தேதிகளில் மாநிலத் தலைவர் டாக்டர் S வடிவேல் முருகன் தலைமையில் நடைபெற்றது. சேவாபாரதி தென்தமிழக புரவலர் வெள்ளிமலை பூஜ்ய சைதன்யானந்த சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆசியுரை வழங்கினார். பொதுக்குழுவில் தென் தமிழகத்தில் தற்பொழுது நடைபெறும் சமூக நலன் சேவை பணிகள், அதனை விரிவு படுத்துவது, பேரிடர் காலத்தில் மக்கள் துயர் நீக்கும் பணிகள், சேவை பணிகளில், சமுதாயத்தை இணைத்து செயல்படுவது போன்றவை விவாதிக்கப்பட்டன. தென்பாரத சேவா பிரமுக் பத்மகுமார், சேவை பணியின் மகத்துவம், கல்வி, ஆரோக்கியம், சுயசார்பில் பின்தங்கியுள்ள மக்களை கண்டுபிடித்து சேவை பணியின் மூலமாக அவர்களையும் இணைத்து சமூக நலப் பணிகளை செய்ய வலியுறுத்தினார்.