நீதி கேட்டு போராட்டம்

கோவை பள்ளி மாணவி பொன்தாரணி தற்கொலை விவகாரத்தில் அந்த மாணவியில் மரணத்திற்கு நீதி கேட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி) திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக சில நாட்களுக்கு முன் அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிவந்த ஏ.பி.வி.பி அமைப்பினர், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.