லவ் ஜிஹாத் கொலை

ஆக்ராவில் உள்ள  ஆலம் படா காலனியில் வசித்து வரும் ஹிந்து குடும்பத்தை சேர்ந்த துஷ்யந்த் என்பவரின் தங்கை வர்ஷா, ஃபயீம், குரேஷி என்ற முஸ்லிம் நபரை காதலித்தார். குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அப்பெண் காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்து ஒன்றரை வருடம் கழித்து சமீபத்தில் அப்பெண் ஃபயீம், குரேஷியின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. தன் பா.ஜ.க நண்பருடன் துஷ்யந்த் அங்கே விரைந்தார். தூக்குக் கயிறு அந்த பெண்ணுக்கு எட்டாத தொலைவில் இருந்தது கண்டு சந்தேகம் அடைந்த துஷ்யந்த் தன் தங்கையின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஹிந்து முறைப்படி தகனம் செய்துகொள்கிறோம் என தெரிவித்தார். இதனையடுத்து அக்குடும்பத்தினரும் அருகில் குடியிருக்கும் முஸ்லிம்களும் துஷ்யந்த் குடும்பத்திரை கற்களால் தாக்கினர். துப்பாக்கியாலும் சுட்டனர். தப்பியோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் துஷ்யந்த். இதனையடுத்து காவல்துறையினர் உதவியுடன் வர்ஷாவின் உடல் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. காவல்துறை தற்போது இவ்வழக்கை விசாரித்து வருகிறது.