பாரதத்தின் சுதந்திரமடைந்த 75வது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மனத்தின் குரல் நிகழ்ச்சியில் முன்பு அறிவித்தபடி, புகழ்பெற்ற நமது பாரதத்தின் வளமான வரலாறு, பல்வேறு கலச்சாரங்கள், சிறந்த சாதனைகளை நினைவுகூரும் வகையிலான போட்டிகள் நடைபெறுகின்றன. பாரத அரசாங்கத்தின் முன்முயற்சியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பல்வேறு வயதினருக்கான வினாடிவினா போட்டிகள், மாறுவேட போட்டிகள், சட்டம் குறித்த ஆன்லைன் வினாடிவினா, தேசபக்தி பாடல் போட்டி, மராத்தான், படைப்பாற்றல், கதை எழுதும் போட்டி, வீரர்களின் கதை சொல்லும் போட்டிகள், கட்டுரை போட்டிகள், வரைதல் என பல்வேறு போட்டிகள் இதில் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய விரும்புவோர் https://amritmahotsav.mygov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.