26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

மஹாராஷ்டிராவின் கச்சிரோலி மாவட்டத்தில் சி 60 கமாண்டோ படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 26 நக்சல் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஏ.டி.எஸ்.பி சௌம்யா முன்டே தலைமையில் சி 60 கமாண்டோக்கள் மர்டின்டோலா காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, அதிகாலை 5 மணிக்கு நக்சல் பயங்கரவாதிகளுடன் சண்டை தொடங்கியது. 26 நக்சல்களின் உடல்கள் இதுவரை காட்டுப்பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டன. சில நக்சல்கள் சரணடைந்துள்ளனர். காயம்பட்ட வீரர்கள் வானூர்தி வழியாக மீட்கப்பட்டு நாக்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் காட்டுப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என எஸ்பி அங்கித் கோயல் தெரிவித்தார். மஹாராஷ்டிரா சத்திஸ்கர் மாநில எல்லையில் கத்ரிசோலி மாவட்டம் உருவானபோது அங்கு நக்சல்களின் நடவடிக்கைகளை ஒடுக்க அப்போதைய எஸ்.பி ரகுவன்ஷி, 1990 டிசம்பரில் 60 கமாண்டோ வீரர்களை கொண்டு சி 60 கமாண்டோ படைப் பிரிவை தோற்றுவித்தார். நக்சல்களுக்கு எதிராக பல்வேறு வெற்றிகரமான ஆபரேசன்களை இந்த படைப்பிரிவு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.