கோயில் இடிப்பு தடுத்து நிறுத்தம்

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கு வெளியே இருந்த மூன்று கோயில்களை இடிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதனை அறிந்து அங்கே சென்ற இந்து முன்னணியினர் அரசு அதிகாரிகளின் இந்த மக்கள் விரோத செயலை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடத்தி கோவில் இடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.