பாலம் அமைத்த சேவாபாரதி

கேரளாவில் சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் நிலச்சரிவுகளின்போது மக்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி அமைப்புகள், கடந்த 25 நாட்களாக குட்டிக்கல், கொக்கையார், முண்டகாயம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. அங்கு இடுக்கி மாவட்டத்தில் கோட்டயத்தை இணைக்கும் ஒரு பாலம் வெள்ளத்தால் உடைந்துபோனது. அதனை கேரள அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, கேரள சேவாபாரதி தொண்டர்கள் இணைந்து தற்காலிக மரப் பாலம் அமைத்து மக்கள் சென்றுவர வழி செய்து கொடுத்தனர்.