பரிசுக்கு பிரதமர் நன்றி

மக்கள் பத்ம விருது பெற்ற துலாரி தேவி பிரதமர் மோடிக்கு அளித்த அன்பு பரிசுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “மக்கள் பத்ம விருது பெற்றவர்களில் துலாரி தேவியும் ஒருவர். அவர் பீகாரில் உள்ள மதுபானியைச் சேர்ந்த திறமையானக் கலைஞர். விழாவிற்குப் பிறகு விருது பெற்றவர்களுடனான முறைசாரா சந்திப்பின்போது, அவர் தனது கலைப் படைப்பை எனக்குப் பரிசாக வழங்கினார். அவரது இந்தச் செயல் எனது மனதைத் தொட்டது. அவருக்கு எனது நன்றி” என் கூறியுள்ளார்.