தடுத்து நிறுத்தம்

ஐயாயிரம் மாணவிகள் படிக்கும் திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற  ஈ.வே ராமசாமியின் புத்தகம் மாணவிகளுக்கு  பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா வழங்க ஏற்பாடு செய்து இருந்தார். ஆபாசமான வகையிலும், பெண்களின் சுய ஒழுக்கம் சார்ந்த விஷயங்களையும், ஹிந்து மதத்தை இழிவு செய்யும் வகையிலான இப்புத்தகம் பள்ளி மாணவிகளுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்த பா.ஜ.கர் மாவட்ட தலைவர் செந்தில் வேல் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பள்ளி நிர்வாகத்திடம் இந்த புத்தகத்தை பள்ளி மாணவிகளுக்குத் தரக்கூடாது என்று எடுத்துரைத்தனர். இதனை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியையை கண்டித்து இதுபோல விஷமத்தனமான விஷயங்களை பள்ளி மாணவிகளிடம் புகுத்த வேண்டாம் என்றும் இதுபோன்று இனி நடந்தால் பள்ளி முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து  மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா உட்பட கல்வி அதிகாரிகள் இந்த புத்தகத்தினை வினியோகிக்க மாட்டோம் என்றும் மேற்கொண்டு இது போன்ற தவறுகள் நடக்காது என உறுதி அளித்துள்ளனர்.