அண்ணாமலை கேள்வி

தி.மு.க அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொதுமக்களுக்கு 100 ரூபாய் விநியோகித்துக் கொண்டுள்ளார். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் தினமும் 300 நபர்களுக்கு இப்படி வினியோகிக்கிறார். மந்திரியாக அவர் தான் ஈட்டிய பணத்தை மக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இவ்வாறு செய்வதா? அரசாங்கம் தோல்வி அடையும்போது அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?’ என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.