எஸ்.டி.பி.ஐ தலைவர் ராஜினாமா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பி.எப்.ஐ) என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் தேசிய செயலாளருமான தஸ்லீம் ரஹ்மானி அக்கட்சியின் உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விலகுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு காரணமாக, கட்சியின் அரசியல் சித்தாந்தத்துடன் தான் உடன்படுவதாகவும் ஆனால், அக்கட்சியின் திட்டங்கள், கொள்கை உட்புகுத்தலின் வழிமுறைகள் ஒரு அரசியல் கட்சியை விட கார்ப்பரேட் போன்று உள்ளது என்றும், கட்சி தனது தவறான உத்திகளால் சக்திவாய்ந்த அரசியல் கட்சியாக உருவெடுக்கத் தவறிவிட்டது என்றும் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.