உண்மையை சொன்னால் மிரட்டல்

சேலம் மாவட்டம் எடப்பாடி தாவந்தெரு பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த விறகுகளை ஆலய நிர்வாகம் முறைகேடு செய்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதியை சார்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர் அதன் உண்மைத் தன்மை குறித்து சமூக வலைதளங்களில்  பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்த அந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.