ஹிந்துக்களை அவமதிக்கும் ஜெய்பீம்

உண்மை கதையை படம் எடுப்பதாக கூறி திரைப்பட நடிகர் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படம், அதில் செய்யப்பட்டுள்ள உண்மை திரிபுகள், புகுத்தப்பட்டுள்ள பொய்கள், ஒருசார்பு காழ்ப்புணர்ச்சி காட்சி அமைப்புகளால் தொடர்ந்து பல எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்தோணிசாமி என்ற பெயரை ‘குரு’ என மாற்றியது ஏன்? என்ற நியாமான கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. திட்டமிட்டே வைக்கப்பட்ட வன்னியர் சங்க காலண்டரை பலத்த எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. ஆனால் மீண்டும் திட்டமிட்ட ரீதியில் மகாலட்சுமி காலண்டராக அத்னை மாற்றிவிட்டார்கள். அப்படியெனில் சூர்யாவுக்கும் படக் குழுவினருக்கும் ஹிந்துக்கள் என்றால் இளக்காரமா? ஹிந்துக்கள் மீது ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? அந்தோணிசாமி வீட்டில் லட்சுமி காலண்டர் எப்படி வரும்? அந்தோணிசாமி என்ற அந்த உண்மையான குற்றவாளியின் பெயரையே துணிந்து சொல்ல பயப்படும் இவரை போன்றவர்கள் எதற்கு உண்மை கதையை படம் எடுக்கிறார்கள்? என்ற கேள்விகள் மக்கள் மனதில் இயற்கையாகவே எழுகிறது.மொத்தத்தில் தனது ஜாதிய வன்மத்தை காட்டியவர்கள் தற்போது மத வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதே உண்மை.