சூர்யாவுக்கு கௌதமன் கண்டனம்

சூர்யா நடித்து ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்தி விட்டு பணம் சம்பாதிக்க, அந்தோணிசாமி என்கிற பெயருக்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டு குருவையும் அக்னி குண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்தியது தவறு. அந்தோணிசாமி செய்த தவறையும் தாண்டி நீங்கள் செய்தது மாபெரும் தவறு. மேலும், இந்த வழக்கில் நீதி கிடைத்த பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த குரலற்றவர்களின் குரலாக இறுதி வரை உயிர் உருக அருகில் நின்ற கோவிந்தன் யார் என்பதையும், அவரின் தியாகத்தையும் மறந்தீர்களா அல்லது மறைத்தீர்களா? நேர்மையற்ற காட்சியை நீக்குவதோடு, தங்களையும் சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.