ஏவுகணை சோதனை வெற்றி

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ, போர் விமானம் வாயிலாக இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சல்மரில், டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய விமானப் படையும் இணைந்து, கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3ம் தேதிகளில் இதற்கான சோதனைகளை நடத்தின. அப்போது, இந்த ஏவுகணையினை செயற்கைக்கோள் வாயிலாக செலுத்தும் தொழில்நுட்பமும், இலக்கை துல்லியமாக தகர்க்கும் தொழில்நுட்பமும் பரிசோதிக்கப்பட்டன. இந்த இரண்டு சோதனைகளிலும், இலக்கு மிகத் துல்லியமாக தகர்க்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.