வில்லங்கம் செய்யும் நெடுஞ்சாலைத்துறை

கிருஷ்ணகிரியில் பெருமை வாய்ந்த, 18 கிராமங்களுக்கு சொந்தமான ஏழு பிள்ளை மாரியம்மன் கோயில் உள்ள இடத்தில் நேதாஜி சாலை எனும் பெயரை மாற்றி இரவோடு இரவாக நெடுஞ்சாலைத் துறை தர்கா சாலை என்று பெயர்ப் பலகை வைத்துள்ளது. இந்து முன்னணி நெடுஞ்சாலைத் துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. மேலும், அந்த ஊர் முக்கியஸ்தர்கள், பெரியவர்கள் அனைவரும் இணைந்து உடனடியாக தர்கா சாலை எனும் பெயர் பலகையை அகற்றி நேதாஜி சாலை என்ற பழைய பெயரையை வைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.