நிலக்கரி நிறுவனங்களுக்கு பாராட்டு

அனல் மின் நிலையங்களுக்கு கடந்த 28, அக்டோபர் 2021 அன்று ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி நிலக்கரித்துறை சாதனை படைத்துள்ளது. இதில், 18 லட்சம் டன் நிலக்கரி, கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு. இந்த சாதனையை படைத்த அனைத்து நிலக்கரி நிறுவனங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி,  நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொடர்ந்து அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.