விஜயபாரதம் தீபாவளி மலர் வெளியீடு

விஜயபாரதம் வார இதழின் தீபாவளி மலர் நேற்று புரசைவாக்கம் ‘சேவா’ அலுவலக அரங்கில் வெளியிடப்பட்டது. மாதவ சேவா அறக்கட்டளையின் அறங்காவலர் பி. கேசவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கலைமகள் மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் மலரை வெளியிட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத மக்கள் தொடர்பு செயலாளர் எஸ். பிரகாஷ் சிறப்புரையாற்றினார். சுதந்திமடைந்த 75வது வருடத்தை முன்னிட்டு அதனை ஒட்டிய பல்வேறு அரிய தகவல்கள், கட்டுரைகள், கதைகள் என பல்சுவை இதழாக இந்த வருட விஜயபாரதம் தீபாவளி மலர் வெளியாகியுள்ளது என்பது சிறப்பு.