இணைய புத்தக கண்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில், சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரியில், 15 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். இந்த கண்காட்சியில், 700க்கும் மேற்பட்ட அரங்குகளும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களும் இடம் பெறும். கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடு, வெளியூர்களில் இருந்து புத்தக கண்காட்சிக்கு மக்கள் வருவது கடினம் என்பதால், அவர்களுக்காக இணையவழியில் புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதற்காக, அடுத்த மாதம் 19ம் தேதி முதல் இணையவழியில் புத்தக கண்காட்சியை நடத்த ‘பபாசி’ முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.