தமிழகத்திற்கு உரம் ஒதுக்கீடு

தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதாக தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனையடுத்து, தமிழகத்திற்கு விவசாயத்திற்கு தேவையான யூரியா உரத்தை 90 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் காரைக்கால் துறைமுகத்திற்கு விரைவில் வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவையை முன்னிட்டு முதற்கட்டமாக அக்டோபர் இறுதிக்குள் ஸ்பிக் 10 ஆயிரம் மெட்ரிக் டன், எம்.எப்.எல் நிறுவனம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.