மீண்டும் சாமி சிலைகள் உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மீண்டும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இங்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கால் ஹிந்துக் கோயில்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதுபோன்ற சமூக விரோதிகளின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரி இந்து முன்னணி சார்பில் சிறுவாச்சூரில் சாலை மறியல் நடைபெற்றது.