சிறுவனின் தேசப்பற்று

பெங்களூரு விமான நிலையத்தில் சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு எதிரே அங்கிருந்த வாகனத்தில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் நின்றிருப்பதை பார்த்த உடனே, அந்த சிறுவன் அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தான். சிறுவனின் இச்செயலை சற்றும் எதிர்பார்க்காத அந்த அதிகாரி, புன்னகையுடன் அவனுடைய மரியாதை ஏற்றுக்கொண்டும் பதில் சல்யூட் வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனுக்கும் அதிகாரிக்கும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதுடன் சிறுவனுக்கு தேச பக்தியையும், ஒழுக்கத்தையும் கற்பித்த பெற்றோருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.