தாய்மதம் திரும்பும் அதிபரின் மகள்

இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு. அந்த நாட்டின் முதல் ஜனாதிபதி சுகர்னோ. இவரின் மூன்றாவது மனைவி பத்மாவதியின் மகள் சுக்மாவதி சுகர்னோபுத்ரி. இவர், இந்தோனேசியாவின் 5வது ஜனாதிபதியான மெகாவதி சோகர்னோபுத்ரியின் சகோதரியும், இந்தோனேசிய தேசியக் கட்சியின் நிறுவனரும் ஆவார். இவர், தற்போது தனது 70வது வயதில், முஸ்லிம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளார். அக்டோபர் 26ம் தேதி குடும்பத்தின் பூர்வீக நிலமான பாலியின் சிங்கராஜா நகரில் நடைபெறும் ‘சுதி வதனி’ என்ற ஒரு குடும்ப விழாவில் அவர் ஹிந்து மதத்தைத் தழுவுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரின் குடும்பத்தார் அனைவரின் சம்மதத்துடன் நடைபெறும் இவ்விழாவிற்கு, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவர், இதற்கு முன்பாக பல ஹிந்துமத விழாக்களில் கலந்து கொண்டுள்ளார். தனது மனமாற்றம், மதமாற்றம் குறித்து பல ஹிந்து மதத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி தெளிவு பெற்றே இந்த முடிவை எடுத்துள்ளார்.